சென்னையில் மாநாடு- திடீரென நெல்லை கலெக்டர் டிரான்ஸ்பர்
Subscribe to Oneindia Tamil
நெல்லை: சென்னையில் இன்று கலெக்டர்கள் மாநாடு நடைபெறும் என்று நிலையில் நேற்று திடீரென திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் செல்வராஜ் மாற்றப்பட்டிருக்கிறார்.
திருநெல்வேலி கலெக்டராக செல்வராஜ் கடந்த ஆண்டு நியமிக்கப்பட்டிருந்தார். இந்த மாவட்டத்தில் இருக்கும் கூடங்குளத்தில்தான் கடந்த ஆண்டு முழுவதும் தொடர் போராட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால் எந்த அதிகாரியும் மாற்றப்படாமல் இருந்து வந்தனர்.
இந்நிலையில் சென்னையில் இன்று கலெக்டர்கள், எஸ்.பிக்கள் மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மாநாட்டுக்கு முதல் நாளான நேற்று திடீரென கலெக்டர் செல்வராஜ் மாற்றம் செய்யப்பட்டு அவர் பேரூராட்சிகள் துறை இயக்குனராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
நெல்லை கலெக்டராக, வணிகவரித்துறை இணை ஆணையர் சமயமூர்த்தியை நியமித்து தமிழக அரசு நேற்று உத்தரவு பிறப்பித்திருக்கிறது.












Click it and Unblock the Notifications