ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று கோவை வருகை
கோவை: சூலூர் விமானப்படை தளத்தில் நடக்கும் சிறப்பு விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று கோவை வருகிறார்.
இந்திய விமானப் படை, பறக்கும் படை பிரிவுகளான ஸ்குவாட்ரன்-25 மற்றும் ஸ்குவாட்ரன்-33 ஆகியவற்றின் முகாம் கோவை மாவட்டம் சூலூரில் உள்ளது. இங்குள்ள வீரர்களின் கடின உழைப்பு, வீரம் மற்றும் தியாகம் ஆகியவற்றை பாராட்டி கௌரவிக்கும் வகையில் ஜனாதிபதியின் 'ஸ்டாண்டர்டு' விருது வழங்கப்படுகிறது.
இந்த விருது வழங்கும் விழா நாளை நடைபெறுகிறது. இந்த விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டு விருது வழங்கி வீரர்களை கவுரவிக்க உள்ளார்.
இதற்காக அவர் இன்று இரவு 7.30 மணிக்கு டெல்லியில் இருந்து ராணுவ விமானத்தில் புறப்பட்டு பீளமேடு விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து கோவை அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்று ஓய்வெடுக்கிறார்.
நாளை சூலூர் விமானப் படை தளத்துக்கு செல்லும் அவர் அங்கு விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்கிறார். விழா முடிந்ததும் சூளூரில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.












Click it and Unblock the Notifications