ரூ20 லட்சம் சொத்து ! அதிர வைத்த இலங்கை பிச்சைக்காரர்!
கொழும்பு: இலங்கையின் ராகம ரயில் நிலையத்தில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த ஒருவரது சொத்து மதிப்பு ரூ20 லட்சம் என்று தெரியவந்துள்ளது.
ராகம ரயில் நிலையங்களில் பெட்டி பெட்டியாக ஏறி பயணிகளிடம் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த 18 பேர் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து அனைவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், பிச்சை எடுத்தே லட்சாதிபதியான கதையை ஒருவர் சொல்ல வாயடைத்துப் போயிருக்கின்றனர் போலீசார்.
ஒரு வேன், 2 ஆட்டோக்களுக்கும் அவர் சொந்தக்காரராம்! மொத்தமாக ரூ20 லட்சம் மதிப்புள்ள சொத்துக்கு அதிபதியான அந்த பிச்சைக்காரர் தினமும் வேனில் நல்ல உடை அணிந்து வருவாராம்.. ரயில் நிலையத்தில் 'பார்க்கிங்' செய்துவிட்டு உடையை மாற்றி பிச்சைக்காரராக வேடம் போட்டுக் கொள்வாராம்.
இப்படி பிச்சைக்கார வேஷம் போட்டே லட்சாதிபதியானாராம் அவர்! அடேங்கப்பா..!












Click it and Unblock the Notifications