பொருளாதார வளர்ச்சியில் முதன்மை மாநிலமாக்க தீவிர கவனம்: ஜெயலலிதா பேச்சு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தை பொருளாதார வளர்ச்சியில் முதன்மை மாநிலமாக்க தீவிர கவனம் செலுத்தி வருவதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று நடைபெற்ற கலெக்டர்களுக்கு மட்டுமான மாநாட்டில் அவர் பேசுகையில், தமிழ்நாட்டை பொருளாதார வளர்ச்சியில்முதன்மை மாநிலமாக மாற்ற நான் தனிப்பட்ட முறையில் தீவிர கவனம் செலுத்தி வருகிறேன். நமது மாநிலத்தில் அமைதியும், ஸ்திரத்தன்மையும் நீடிக்கிறது. இது நாட்டிலேயே தமிழ்நாட்டை நம்பர் ஒன் மாநிலமாக மாற்றும்.

தமிழகத்தில் வலுவான பொருளாதார வளர்ச்சி உறுதியாக இருப்பதை பொருளாதர வல்லுநர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். இதனால் விவசாயம், தொழில் மற்றும் சேவைத் துறைகளில் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும். கல்வி, சுகாதாரம், உள்கட்டமைப்பில் வலுவான அடித்தளம் அமைக்க வேண்டும். இதனால் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் மாநிலமாக தமிழகம் மாறும்.

அரசின் திட்டங்களை வெற்றிகரமாக அமல்படுத்தினால் தொலை நோக்கு பார்வை நனவாகும். இதற்காக மாவட்ட கலெக்டர்கள் இதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்றார்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+