Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பணமோசடி வழக்கு: சிவகாசி ஜெயலட்சுமிக்கு டிச. 24ல் தீர்ப்பு

Subscribe to Oneindia Tamil

Sivakasi Jayalakshmi
மதுரை: சிவகாசி ஜெயலட்சுமி மீதான பணமோசடி வழக்கு விசாரணை முடிவடைந்துள்ளதை அடுத்த டிசம்பர் 24ம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என்று மதுரை தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிபதி கூறியுள்ளார்.

சிவகாசி ஜெயலட்சுமி மீது, இன்ஸ்பெக்டர் இளங்கோவனின் உறவினர் சண்முகசுந்தரி, மதுரை வங்கி மேலாளர் சேஷாத்திரி, நகைக்கடை உரிமையாளர் மனோகரன் ஆகியோர் பண மோசடி புகார் செய்தனர்.

இந்த பணமோசடி வழக்குகளை சி.பி.ஐ., விசாரித்தது. அவர்கள் தாக்கல் செய்த மனு குறித்த விசாரணை, தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நடந்து வருகிறது. புகார் அளித்த, இன்ஸ்பெக்டர் இளங்கோவனின் உறவினர் சண்முகசுந்தரி, மதுரை வங்கி மேலாளர் சேஷாத்திரி, தீபம் நகைக்கடை உரிமையாளர் மனோகரன் ஆகியோர், ஏற்கனவே சாட்சியம் அளித்திருந்தனர். சாட்சிகளிடம் விசாரணை முடிந்து, சிவகாசி ஜெயலட்சுமியிடம் விசாரணை நடந்தது.

கடந்த முறை ஆஜரான, ஜெயலட்சுமியிடம், அவர் தரப்பு சாட்சியங்களை விசாரிக்க, நீதிபதி விருப்பம் கேட்டார். அவர் சம்மதம் தெரிவித்ததை அடுத்து விசாரணை தொடர்ந்து நடைபெற்றது. நேற்று, விசாரணை முடிவடைந்த நிலையில், இந்த வழக்குகளின் தீர்ப்பு டிசம்பர் 24ம் தேதிக்கு வழங்கப்படும் என, நீதிபதி கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+