உலகின் வயதான பெண்ணாக கின்னஸில் இடம்பெற்ற 2 வாரத்திற்குள் இறந்த டினா
வாஷிங்டன்: உலகின் வயதான பெண்மணியாக கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்து 2 வாரம் கூட ஆகாத நிலையில் டினா மான்பிரட்னி காலமானார். அவருக்கு வயது 115.
உலகின் வயதான பெண்மணியாக கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்தவர் ஜார்ஜியாவைச் சேர்ந்த பெஸி கூப்பர். அவர் இந்த மாத துவக்கத்தில் தனது 116வது வயதில் மரணம் அடைந்தார். இதையடுத்து ஐயோவாவைச் சேர்ந்த 115 வயதான டினா மான்பிரெட்னி உலகின் வயதான பெண்மணியாக கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றார்.
அவர் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்று இரண்டு வாரங்கள் கூட ஆகாத நிலையில் ஐயோவாவில் உள்ள மருத்துவமனையில் அவர் நேற்று இறந்துவிட்டார் என்று அவரது குடும்ப வட்டாரம் தெரிவித்தது. அவர் இறந்ததை டினாவின் கொள்ளு பேத்தி லோரி லோக்லி உறுதிபடுத்தினார். ஆனால் டினா எப்படி இறந்தார் என்பதை அவர் தெரிவிக்கவில்லை.
டினா கடந்த 1897ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4ம் தேதி இத்தாலியில் பிறந்தார். பின்னர் 1920ம் ஆண்டு தனது கணவர் ரிக்கார்டோவுடன் ஐயோவாவுக்கு வந்து செட்டில் ஆனார். அவரது கணவர் ஏற்கனவே இறந்துவிட்டார்.












Click it and Unblock the Notifications