Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 24 பேரின் கருணை மனு டிஸ்மிஸ்- 13 பென்டிங்

Subscribe to Oneindia Tamil

Mercy Petition
டெல்லி: ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 24 பேரின் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டிருப்பதாக உள்துறை இணை அமைச்சர் முள்ளப்பள்ளி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

லோக்சபாவில் கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த அவர், 2009-ம் ஆண்டிலிருந்து இதுவரை மொத்தம் 24 பேரின் கருணை மனுக்கள் அரசால் நிராகரிக்கப்பட்டிருக்கின்றன. இதில் மும்பை தாக்குதலில் தொடர்புடைய அஜ்மல் கசாப்பின் கருணை மனுவும் அடக்கம். கசாப் கடந்த மாதம் 21-ந் தேதி மகாராஷ்டிராவின் எரவாடா சிறையில் தூக்கிலிடப்பட்டார்.

இன்னும் 13 பேரின் கருணை மனுக்கள் நிலுவையில் உள்ளன. 2001-ம் ஆண்டு நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் தூக்கு விதிக்கப்பட்ட அப்சல் குரு மற்றும் பஞ்சாப் முன்னாள் முதல்வர் பியாந்த்சிங் கொலையாளி ரஜோனா ஆகியோரது கருணை மனுக்கள் அடக்கம் என்றார் அவர்.

மேலும் அரசியல் சாசனப் பிரிவு 72-ன் கீழ் கருணை மனுக்கள் மீது முடிவு எடுக்க கால வரையறை எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+