சச்சினுக்கு எதிரான மனு: டெல்லி ஹைகோர்ட் தள்ளுபடி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ராஜ்ய சபா உறுப்பினராக பதவியேற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் சாதனைகளை கவுரவிக்கும் வகையில், அவருக்கு மத்திய அரசு, ராஜ்ய சபாவின் நியமன உறுப்பினர் பதவி அளித்து கௌரவித்தது.

ஆனால் விளையாட்டு துறையில் மட்டுமே புகழ்பெற்ற சச்சின் டெண்டுல்கருக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கியதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. குறிப்பாக கலைத்துறை ஒதுக்கீட்டின் கீழ் விளையாட்டுத்துறையைச் சேர்ந்த சச்சினுக்கு பதவி வழங்கியது செல்லாது என அறிவிக்க மனுவில் வலியுறுத்தப்பட்டிருந்தது. இந்த மனுவை டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் இன்று தள்ளுபடி செய்தனர்.

ஏற்கனவே சச்சினுக்கு பதவி வழங்கப்பட்டதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்திலும், அலகாபாத் உயர்நீதிமன்றத்திலும் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் உச்சநீதிமன்றத்துக்கு மாற்றபட்டது. அவை விசாரணைக்கு தகுதியற்றவை என்று அந்த மனுக்களை கடந்த அக்டோபர் மாதம் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+