பலாத்காரம் நடந்தபோது பணியில் இருந்த போலீஸார் யார்?.. பெயர் கேட்கும் உயர்நீதிமன்றம்

Subscribe to Oneindia Tamil

Delhi HC
டெல்லி: டெல்லியில் இளம் பெண் பாலியல் பலாத்காரம் நடந்த சமயத்திலும், அந்தப் பெண்ணை கொடுங்கோலர்கள் பஸ்சில் பல கிலோமீட்டர் தூரத்திற்கு சித்திரவதை செய்த சமயத்திலும் அந்தப் பகுதிகளில் பணியில் இருந்த காவலர்கள் யார் யார் என்பதை தெரிவிக்குமாறு டெல்லி காவல்துறைக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மருத்துவ மாணவி ஒருவர் ஓடும் பஸ்சில் பாலியல் பலாத்கார கொடுமைக்குள்ளானார். ஒரு கும்பலாக இந்த அட்டூழியத்தைச் செய்தனர். இந்த செயல் நாடு முழுவதையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்த நிலையில் இதுதொடர்பான வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து எடுத்துள்ளது. இன்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் அரசுத் தரப்பு வக்கீலிடம், கிட்டத்தட்ட 40 நிமிடங்கள் அந்த ஓடும் பஸ்சில் அப்பெண் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார், உயிருக்கும், கற்புக்கும் போராடியுள்ளார். ஏன் எந்தக் காவலரும் இந்தப் பேருந்தைப் பார்க்கவில்லை.

முக்கால் மணி நேரம் ஒரு பேருந்தில் நடந்த சம்பவம் போலீஸாரின் கவனத்திற்கே வரவில்லை என்பது ஆச்சரியமாக உள்ளது. அந்த சமயத்தில் அந்தப் பகுதிகளில் இரவுப் பணியில் இருந்த காவலர்கள் யார் என்ற விவரத்தை காவல்துறை தெரிவிக்க வேண்டும்.

இந்த விசாரணையில் மிகவும் கெடுபிடியாக இருக்க வேண்டும். மேலும் வழக்கு தொடர்பான அனைத்துத் தகவல்களையும் மறைக்காமல் கோர்ட்டில் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+