டெல்லி பலாத்கார வழக்கு: பஸ் கிளீனர் உள்பட 2 பேர் கைது
டெல்லி: டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ படிப்பு மாணவியை சீரழித்த வழக்கில் மேலும் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு டெல்லியில் ஓடும் பேருந்தில் 6 பேர் கொண்ட கும்பல் மருத்துவ படிப்பு படிக்கும் மாணவியை சீரழித்தது. இதை தடுக்க முயன்ற அவரது ஆண் நண்பரை இரும்புக் கம்பியால் தாக்கியது. இந்த வழக்கில் பேருந்து ஓட்டுநர் ராம் சிங், அவரது சகோதரர் முகேஷ் சிங், ஜிம்மில் பணிபுரியும் வினய் சர்மா மற்றும் பழ வியாபாரி பவன் குப்தா ஆகியோரை போலீசார் கடந்த திங்கட்கிழமை கைது செய்தனர்.
மேலும் தலைமறைவாக இருந்த 2 பேரை தேடி வந்தனர். இந்நிலையில் சம்பவம் நடந்த பேருந்தின் கிளீனர் ராஜு மற்றும் இன்னொரு நபரை உத்தர பிரதேச மாநிலம் பதௌன் மற்றும் பரேலி பகுதியில் கைது செய்து டெல்லிக்கு கொண்டு வந்தனர். தலைமறைவாக இருந்த அவர்களைப் பிடிக்க போலீசார் ஹரியானா, பீகார் மற்றும் உத்தர பிரதேசத்தில் நள்ளிரவில் சோதனை நடத்தி வந்தனர். அப்போது தான் அந்த இருவரும் சிக்கினர்.
இந்த வழக்கு குறித்து போலீசார் இன்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யவிருக்கின்றனர். 5 போலீஸ் சோதனைச் சாவடிகளைத் தாண்டி அந்த பேருந்து சென்றபோது போலீசார் ஏன் அதை தடுத்து நிறுத்தவில்லை என்றும் இன்று விளக்கம் அளிக்க உள்ளனர்.












Click it and Unblock the Notifications