பலாத்கார சம்பவம்.. டெல்லி தெருக்களில் பெண்கள் ஆவேசம், ராஷ்டிரபதி பவன் நோக்கி ஊர்வலம்!

Subscribe to Oneindia Tamil

Rashtrapati Bhavan
டெல்லி: டெல்லியில் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவத்தைக் கண்டித்து டெல்லியில் பெண்கள் இன்று போராட்டத்தி்ல குதித்தனர். குடியரசுத் தலைவர் மாளிகை நோக்கி பெண்கள் ஊர்வலமாக சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

டெல்லியில் ஓடும் பஸ்சில் பெண் ஒருவர் கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்த செயல், நாட்டு மக்களிடையே குறிப்பாக பெண்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இந்த விவகாரம் டெல்லியை உலுக்க ஆரம்பித்துள்ளது.

இன்று நூற்றுக்கணக்கான பெண்கள் ஊர்வலமாக கிளம்பினர். அவர்கள் ராஷ்டிரபதி பவன் நோக்கி ஊர்வலமாக சென்றனர். ராஷ்டிரபதி பவனுக்குள் நுழையவும் அவர்கள் முயன்றனர். ஆனால் போலீஸார் முன்கூட்டியே அவர்களைத் தடுத்து நிறுத்தி விட்டனர்.

பல்வேறு பெண்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் முன்னதாக ராஜ்பாத்தில் கூடினர். அங்கிருந்து அவர்கள் ஆவேசக் குரல் எழுப்பியபடி ராஷ்டிரபதி பவன் நோக்கி நடக்க ஆரம்பித்னர். மேலும் பிரதமர் அலுவலகம் நோக்கியும் ஒரு குழு கிளம்பியது. ஆனால் போலீஸார் அவர்களை பெரும் சிரமத்திற்கு மத்தியில் தடுத்து நிறுத்தினர்.

பேரணி போய்க் கொண்டிருந்தபோது வழியில் மேற்கு வங்க மாநில ஆளுநர் எம்.கே.நாராயணனின் கார் அதில் சிக்கிக் கொண்டது. சிறிது நேர போராட்டத்திற்குப் பின்னர் நாராயணனின் கார் அங்கிருந்து கிளம்பிச் சென்றது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+