பாண்டியன் எக்ஸ்பிரசில் பைக்குள் பச்சிளம் குழந்தை!
மதுரை: மதுரையில் இருந்து சென்னை செல்லும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில் ரிசர்வேசன் பெட்டியில் பைக்குள் பச்சிளம் குழந்தை இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. குழந்தையை மீட்ட போலீசார் அதை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
மதுரை ரயில் நிலையத்தில் இருந்து புதன்கிழமை இரவு 8.30 மணிக்கு பாண்டியன் எக்ஸ்ப்ரஸ் ரயில் புறப்பட்டது. சோழவந்தான் அருகே வந்து கொண்டிருந்த போது அந்த ரயிலின் எஸ்,13 முன்பதிவு பெட்டியில் கேட்பாரற்று ஒரு பை இருந்தது. அந்த பைக்குள் இருந்து பச்சிளம் குழந்தையின் அழுகுரல் கேட்டது. இதனால், அந்தப் பெட்டியில் இருந்த பயணிகளிடம் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து டிக்கெட் பரிசோதகர் மற்றும் ரயில்வே போலீசாரிடம் பயணிகள் தெரிவித்தனர். அங்கு வந்த டிக்கெட் பரிசோதகர் அந்தப் பையை எடுத்து பிரித்துப் பார்த்தபோது, பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தை குளிர் காற்றால் நடுங்கி அழுது கொண்டிருந்தது. உடனே பெட்டியில் இருந்த பயணிகள் அந்தக் குழந்தையை, துணியால் சுற்றி முதலுதவி அளித்தனர்.
இதனையடுத்து திண்டுக்கல் ரயில்வே போலீசாரிடம் குழந்தை ஒப்படைக்கப்பட்டது. போலீசார், அந்த குழந்தையை திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பிறந்து சில மணிநேரத்தில் கைவிடப்பட்டு, ரயில் பெட்டியில் பரிதவித்த நிலையில் இருந்த அந்தக் குழந்தைக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
அந்த குழந்தையை தொட்டில் குழந்தைகள் திட்டத்தில் இந்தக் குழந்தையை சேர்ப்பது குறித்து மருத்துவப் பணிகள் இணை இயக்குனருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. குழந்தையை வீசிச் சென்றது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications