ரஷியா, உக்ரைன், போலந்தில் உறைபனிக்கு 200 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
மாஸ்கோ: ரஷியா, உக்ரைன், போலந்து உள்ளிட்ட நாடுகளில் மிகக் கடுமையான உறைபனிக்கு 200 பேர் வரை பலியாகியுள்ளனர்.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உறைபனிக்கு கடந்த ஒரு வாரத்தில் 56 பேர் பலியாகிவிட்டனர். 371 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். உக்ரைனில் பெய்துவரும் உறைபனிக்கு 83 பேர் பலியாகிவிட்டனர். இவர்களில் 57 பேரின் சடலங்கள் சாலையோரம் கிடந்தன. - 15 டிகிரி செல்சியஸ் பனி பெய்து வருவதால் அங்கு 526 பேர் கடும் குளிரினால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
கிழக்கு ஐரோப்பிய நாடான போலந்தில் - 10 டிகிரி செல்சியஸ் அளவிற்கு உறைபனி பெய்கின்றது. இங்கு ஒரு மாதத்தில் 49 பேர் குளிர் தாங்காமல் பலியாகியுள்ளனர்.












Click it and Unblock the Notifications