பாலியல் பலாத்கார சம்பவம்: நீதி கோரி விடிய விடிய சோனியா வீடு முற்றுகை
Subscribe to Oneindia Tamil

டெல்லியில் ராஷ்டிரபதி பவனை நேற்று பகல் முழுவதும் முற்றுகையிட்டதைப் போல சிலர் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைவர் சோனியாவின் வீட்டையும் முற்றுகையிட்டனர்.
இந்த முற்றுகை இரவையும் தாண்டி நீடித்தது. பின்னர் நள்ளிரவு 12 மணியளவில் வீட்டை விட்டு வெளியே வந்த சோனியா காந்தி போராட்டம் நடத்தியோருடன் சுமார் 20 நிமிடம் பேசினார். அப்போது நானும் உங்களுடன் இருக்கிறேன். இந்த சம்பவத்துக்கு உரிய நீதி கிடைக்கும் என்று போராட்டக்காரர்களுடன் தரையில் அமர்ந்தபடியே பேசிய சோனியா உறுதியளித்தார்.
இருப்பினும் கொட்டும் பனியிலும் விடிய விடிய சோனியா வீடு முன்பாக முற்றுகைப் போராட்டம் நீடித்தது. இன்று அதிகாலை போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.












Click it and Unblock the Notifications