டெல்லி பாலியல் பலாத்கார சம்பவம்- 5போலீசார் சஸ்பென்ட்- விசாரணைக் கமிஷன் அமைக்கப்படும்: ஷிண்டே

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணைக் கமிஷன் அமைக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே அறிவித்துள்ளார்.

டெல்லியை உலுக்கிய பெரும் போராட்டத்துக்குப் பின்னர் நேற்று இரவு சுஷில்குமார் ஷிண்டே கூறியதாவது:

பாலியல் பலாத்காரம் ன்ற செயல்களில் ஈடுபடுவோரை தண்டிக்க கடுமையான சட்டத்தை கொண்டுவர மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதற்காக குற்றவியல் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும். அரிதிலும் அரிதான நிகழ்வுகளில் மிக அதிகபட்ச தண்டனை வழங்கப்படுவதை இது உறுதி செய்யும்.

டெல்லியில் மாணவ - மாணவிகளின் ஆர்ப்பாட்டத்தில் வெளிப்படுத்தப்படும் உணர்வுகளில் அரசும் பங்கேற்கிறது. பாலியல் பலாத்கார சம்பவம் தொடர்பான விசாரணையை விரைவு நீதி மன்றத்தில் நடத்தி குற்றவாளிகளை தண்டிப்போம். இந்த சம்பவத்திற்காக நீங்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தை மதித்து உங்கள் கோரிக்கையை ஏற்கிறோம்.

ஓடும் பேருந்தில் நிகழ்ந்த இந்த சம்பவத்தின் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறை அதிகாரிகளின் போக்கு குறித்து விசாரிக்க கமிஷன் அமைக்கப்படுகிறது. இந்த சம்பவத்துக்காக ஏற்கெனவே 5 போலீசார் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு சுஷில்குமார் ஷிண்டே கூறியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+