டெல்லி பலாத்கார சம்பவம்: குற்றவாளிகளைத் தூக்கிலிட லாலு பிரசாத் ஆதரவு
Subscribe to Oneindia Tamil

பீகார் முதல்வர் நிதிஷ்குமார் அரசாங்கத்துக்கு எதிராக ‘பரிவர்த்தன் யாத்திரை'யை தொடங்கியிருக்கும் லாலு பிரசாத் டெல்லி சம்பவம் பற்றி கூறியதாவது:
டெல்லியில் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து தாக்கியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இந்த கொடூர செயலுக்கு 7 ஆண்டுகால சிறை தண்டனை என்பதெல்லாம் போதாது.
பீகார் மற்றும் கர்நாடகாவில்தான் இதுபோன்ற பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகம் நடைபெறுகின்றன.இதுபோன்ற கொடுமைகளை முடிவுக்குக் கொண்டு வரும் வகையிலான சட்டம் அவசியமானது. டெல்லி சம்பவத்தில் ஈடுபட்டோருக்கு தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்பதை ஆதரிக்கிறோம்.
பாலியல் பலாத்கார சம்பவத்தில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என்பதை அடுத்த பார்லிமெண்ட் கூட்டத் தொடரில் ராஷ்டிரிய ஜனதாதளம் வலியுறுத்தும் என்றார் லாலு பிரசாத்.












Click it and Unblock the Notifications