பலாத்கார சம்பவத்தில் புது சர்ச்சை- மாஜிஸ்திரேட் வாக்குமூலம் பெறும்போது குறுக்கிட்ட போலீசார்!
டெல்லி: நாட்டை உலுக்கி டெல்லியை போர்க்களமாக்கியிருக்கும் பாலியல் பலாத்கார சம்பவத்தில் புதிய சர்ச்சை வெடித்திருக்கிறது. பாதிக்கப்பட்ட பெண்ணிடம் மாஜிஸ்திரேட் வாக்குமூலம் பெற்ற போது 3 போலீஸ் உயர் அதிகாரிகள் குறுக்கீடு செய்ததாக புகார்கள் எழுந்துள்ளன.
டெல்லியில் ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மாணவியிடம் கடந்த 21-ந் தேதி இரவு 9.30 மணிக்கு பெண் மாஜிஸ்திரேட் உஷாசதுர்வேதி, மருத்துவமனையில் வாக்குமூலம் பெற்றுக் கொண்டிருந்தார். அப்போது சில உயர் போலீஸ் அதிகாரிகள் குறுக்கீடு செய்திருக்கின்றனர். தங்களது கேள்விகளுக்கு பதிலளிக்க நிர்பந்தித்திருக்கின்றனர். அதாவது மாஜிஸ்திரேட்டுக்கு போட்டியாக வாக்குமூலம் பெற முயற்சித்திருக்கின்றனர். மாணவியின் தாய் விருப்பத்தை மீறி போலீசார் அப்பெண்ணை வீடியோவும் எடுத்திருக்கின்றனர்.
இப்படி மருத்துவமனையில் நடந்த அத்தனை விஷயங்களையும் ஒரு கடிதமாக டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித்துக்கு அனுப்பிவிட்டார் மாஜிஸ்திரேட். இந்த விவகாரத்தை உள்துறை அமைச்சர் ஷிண்டேவுக்கு தெரிவித்திருக்கிறார் ஷீலா.
இதைத் தொடர்ந்து குறுக்கீடு செய்த 3 காவல்துறை அதிகாரிகள் மீதும் விசாரணை நடத்த உத்தரவிடுவது குறித்து உள்துறை அமைச்சகம் ஆலோசனை நடத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications