அரசிதழில் நடுவர்மன்ற தீர்ப்பை வெளியிடக்கூடாது: பிரதமருக்கு கர்நாடகா முதல்வர் கடிதம்
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: காவிரி நடுவர்மன்றத் தீர்ப்பை அரசிதழில் வெளியிடக் கூடாது என்று பிரதமர் மன்மோகன்சிங்குக்கு கர்நாடகா முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் கடிதம் அனுப்பியுள்ளார்.
இது தொடர்பாக மன்மோகன்சிங்குக்கு ஜெகதீஷ் ஷெட்டர் அனுப்பிய கடிதத்தில், காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடகத்தின் மனு நிலுவையில் உள்ளது. மேலும் நடுவர் மன்றத்திலும் எங்கள் மனு நிலுவையில் இருக்கிறது. இதனால் நடுவர்மன்றத் தீர்ப்பை அரசிதழில் வெளியிடும் முடிவுக்கும், காவிரி கண்காணிப்பு வாரியம் அமைக்கவும் கர்நாடகா ஏற்கெனவே எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது.
கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களின் கருத்தை அறியாமல் ஒரு தலைபட்சமாக காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிடக்கூடாது என்று ஷெட்டர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications