பெண்களுக்கான பாதுகாப்பை இரட்டிப்பாக்க வேண்டும்: பிரணாப் முகர்ஜி

கிருஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி பிரணாப் முகர்ஜி விடுத்துள்ள வாழ்த்துச்செய்தியில் கூறியுள்ளதாவது:
டெல்லியில் ஓடும் பேருந்தில் இளம் மாணவி மீது நடத்தப்பட்ட இந்த கொடூரமான திடீர் தாக்குதலை கேள்விப்பட்டு நான் மிகுந்த துயரமும் அதிர்ச்சியும் அடைந்தேன். மக்கள் கொண்டாடும் இந்த கிறிஸ்துமஸ் தினத்தில் அந்த இளம்பெண்ணுக்கு ஏற்பட்ட கொடுமையை நாம் மறந்து விடமுடியாது.
நாடு முழுவதும் இந்த பலாத்கார சம்பவத்துக்கு எதிர்ப்பு போராட்டங்கள் வலுத்து வருகிறது. ஜனாதிபதி மாளிகையிலும் மாணவ-மாணவிகளின் போராட்டம் நடக்கிறது.
இந்த நன்நாளில் பாதிக்கப்பட்ட அந்த மாணவிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்து கொள்கிறேன். மேலும் மன உறுதியும் தைரியும் படைத்த அந்த மாணவி விரைவில் குணமடைய நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம்.
நமது நாட்டில் பெண்கள் அனைவரும் எல்லா நேரத்திலும் பாதுகாப்பாக இருப்பதாக உணரும் வகையில் நாம் அவர்களுக்கான பாதுகாப்பு முயற்சிகளை இரட்டிப்பாக்க வேண்டும். பெண்களுக்கு பூரண பாதுகாப்பு உள்ளது என்பதை நாம் உறுதி செய்தாக வேண்டும்.
ஒருவருக்கொருவர் அன்பு காட்டுதலையும், மற்றவர்களுக்காக வாழும் தியாகம் பற்றியும் மனித குலத்துக்கு உணர்த்த வந்த இயேசுநாதரை நினைவு கூறும் இந்நேரம் நமது எண்ணங்களையும், இதயங்களையும் நல்ல உணர்வுகளால் புதுப்பிக்க வேண்டும்.
உலகம் முழுவதும் மெழுகுவர்த்தி ஒளிஏற்றும் இந்த தருணத்தில் பாதுகாப்பு உணர்வும், பகிர்ந்து கொள்ளும் மனப்பாங்கும் நம்மிடையே பரவட்டும். இவ்வாறு பிரணாப் முகர்ஜி விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications