1960களில் இந்தியாவுக்கு ஆதரவாக சீனா மீது அணுகுண்டு வீச திட்டமிட்ட அமெரிக்கா!

அமெரிக்க அதிபராக 1961- 1963 வரை பதவி வகித்தவர் ஜான் எஃப்.கென்னடி. அவரது பதவிக்காலத்தின்போது வெள்ளை மாளிகையில் பதிவான அவரது பேச்சுகள், சந்திப்புகள் ஆகிய ரகசியத் தகவல்களைத் தொகுத்து 'Listening In: The Secret White House Recordings of John F Kennedy' என்ற தலைப்பிலான ஆங்கிலப் புத்தகம் அண்மையில் வெளியாகியுள்ளது. இப்புத்தகத்தை கென்னடியின் மகள் கரோலின் கென்னடி மற்றும் டெட் விட்மர் ஆகியோர் இணைந்து எழுதியிருக்கின்றனர்.
இதில் குறிப்பிடப்பட்ட முக்கியமான விஷயம், இந்தியா மீது சீனா 1962ல் போர் தொடுத்தது. அதற்கு 6 மாதங்களுக்குப் பிறகு, 1963 மே-ந் தேதி, அப்போதைய அமெரிக்க அதிபர் கென்னடி, மூத்த ராணுவத் தளபதிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். அந்தச் சந்திப்பில் கென்னடி பேசுகையில், இஸ்ரேல் மற்றும் சவூதி அரேபியாவுக்கு உதவுவது போல் இந்தியாவுக்கும் உதவுவது குறித்து நாம் ஏன் சிந்திக்கக் கூடாது? தங்களை சீனா தோற்கடிப்பதை அமெரிக்கா அனுமதிக்காது...அதைத் தடுத்து நிறுத்தும் என்று இந்தியா உறுதியாக நம்புகிறது. அது பற்றி நாம் முடிவு செய்ய வேண்டும்'' என்று கூறியிருக்கிறார்.
இதைத் தொடர்ந்து பேசிய பாதுகாப்பு அமைச்சர் ராபர்ட் மெக்நமாரா பேசுகையில், இந்தியா மீது சீனா மீண்டும் படையெடுத்தால் அந்நாட்டின் மீது அணு ஆயுதங்களைப் பிரயோகிக்கலாம் என்று கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications