டெல்லி கற்பழிப்பு வழக்கை விசாரிக்க நீதிபதி உஷா தலைமையில் கமிஷன்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ படிப்பு மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில் போலீசாரின் கவனக்குறைவு குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி உஷா மிஸ்ரா தலைமையில் கமிஷன் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது என்று நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இன்று டெல்லியில் நடந்த கேபினட் கூட்டத்தில் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கலந்து கொண்டார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ படிப்பு மாணவி கற்பழிக்கப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடந்த ஓய்வு பெற்ற நீதிபதி உஷா மிஸ்ரா தலைமையில் கமிஷன் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த கமிஷன் தனது அறிக்கையை 3 மாதத்திற்குள் சமர்பிக்கும். இந்தியாவில் உள்ள அனைத்து நகரங்களிலும் உள்ள இந்த கற்பழிப்பு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது டெல்லியில் நடந்தது என்பது வெட்கப்பட வேண்டிய விஷயமாகும் என்றார்.

இந்த கமிஷன் கற்பழிப்பு தொடர்பாக டெல்லி போலீசார் எடுத்த நடவடிக்கை குறித்து விசாரணை நடத்துவதுடன் நாட்டில் உள்ள பெண்களின் பாதுகாப்புக்கு என்னென்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பதையும் பரிந்துரைக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+