பாலியல் பலாத்கார வழக்குகள்- 2 மாதத்தில் முடிக்க சுப்ரீம் கோர்ட் அட்வைஸ்!

பாலியல் பலாத்கார சம்பவங்களில் ஈடுபடுவோருக்கு அதிகபட்ச தண்டனை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இதேபோல் பாலியல் பலாத்கார வழக்குகளை விரைந்து முடித்து குற்றவாளிகளுக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டு வருகிறது.
இந்த சூழலில், கடந்த 1998-ம் ஆண்டு நிகழ்ந்த பாலியல் பலாத்கார வழக்கு தொடர்பான மேல்முறையீட்டு விசாரணையின் போது உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது கருத்து தெரிவித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், வன்கொடுமைகள் நடந்து வருகின்றன. குறிப்பாக பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை வழக்குகள் நீதிமன்றங்களில் விசாரணை என்ற பெயரில் நீண்ட காலங்களாக தேங்கியுள்ளன.
பெண்கள் பலாத்காரம் மற்றும் மானபங்கம் தொடர்பாக தேங்கியுள்ள அனைத்து வழக்குகளையும், நடைமுறையில் உள்ள சட்டவிதிகளின் படி விசாரணை தொடங்கியதிலிருந்து 2 மாதங்களுக்குள் விரைந்து முடிக்க வேண்டும். மேலும் விசாரணையை விரைந்து முடிப்பதையும் நீதிமன்றங்கள் உறுதி செய்யவேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.












Click it and Unblock the Notifications