டெல்லி மாணவியின் உடல்நிலை கவலைக்கிடம்: போராடும் சிங்கப்பூர் மருத்துவர்கள்

டெல்லியில் கடந்த 16ம் தேதி இரவு ஓடும் பேருந்தில் 6 பேர் கொண்ட கும்பலால் கற்பழிக்கப்பட்ட மருத்துவ படிப்பு மாணவி சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை அவரின் உடல் நிலை மிகவும் மோசமானது. புதன்கிழமை அவரது நாடித் துடிப்பு வெகுவாகக் குறைந்தது. இதையடுத்து புதன்கிழமை இரவு ஏர் ஆம்புலன்ஸ் மூலம் அவர் சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இருப்பினும் அவரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அம்மருத்துவமனையின் தலைவர் கெல்வின் லோ கூறுகையில்,
இந்தியாவில் அப்பெண்ணுக்கு வயிற்றில் மட்டும் 3 முறை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு ஒரு முறை மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அவரது நிலைமையை சீராக்க மருத்துவர்கள் குழு தங்களால் முடிந்தவற்றை எல்லாம் செய்து வருகிறது. இருப்பினும் அவரது நிலைமை தொடர்ந்து கவலைக்கிடமாகவே உள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications