ரஷிய குழந்தைகளை அமெரிக்கர்கள் தத்தெடுக்க தடை.. புதிய சட்டங்களால் இருநாட்டு உறவில் சிக்கல்
Subscribe to Oneindia Tamil
மாஸ்கோ: ரஷியாவும் அமெரிக்காவும் போட்டி போட்டுக் கொண்டு பதிலடி கொடுக்கும் வகையில் சட்டங்களை நிறைவேற்றியிருப்பதால் இருநாடுகளிடையேயான உறவில் சிக்கல் உருவாகியுள்ளது.
மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் ரஷியர்களைத் தண்டிக்கும் சட்டத்தை அமெரிக்கா கொண்டு வந்துள்ளது. இதற்கு பதிலடியாக ரஷிய குழந்தைகளை அமெரிக்க நாட்டினர் தத்து எடுப்பதை தடுக்கும் வகையில் புதிய சட்டத்தை அந்நாடு கொண்டு வந்துள்ளது.
அமெரிக்கர்கள் தத்து எடுப்பதைத் தடை செய்யும் சட்டத்தில் ரஷிய அதிபர் புதின் நேற்று கையெழுத்திட்டார். இந்த சட்டம் ஜனவரி 1-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
இதனால் இருநாடுகளிடையேயான உறவு பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சீனா மற்றும் எத்தியோப்பியாவுக்கு அடுத்து ரஷியாவில் இருந்துதான் குழந்தைகளை அமெரிக்கர்கள் தத்து எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications