பாலியல் பலாத்காரத்தில் உயிரிழந்த மாணவியின் உடல் தகனம்

டெல்லியில் ஓடும் பேருந்தில் கடந்த 16-ந் தேதி மருத்துவ மாணவி ஒருவரை 6 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரத்துக்குள்ளாக்கியது. பின்னர் ஓடும் பேருந்தில் இருந்து மாணவியை தூக்கி வெளியே வீசியது. நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இச்சம்பவத்துக்கு நீதி கோரி மாணவர்கள் நடத்திய போராட்டத்தால் டெல்லி நகரமே போர்க்களமாகிப் போனது.
பின்னர் அந்த மாணவி மத்திய அரசு செலவில் சிங்கப்பூருக்கு கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டர். ஆனால் சிகிச்சை பலனின்றி அந்த மாணவி உயிரிழந்தார். மாணவியின் உடல் நேற்று நள்ளிரவு ஆம்புலன்ஸ் விமானம் டெல்லிக்கு கொண்டுவரப்பட்டது.
டெல்லிக்கு கொண்டுவரப்பட்ட மாணவியின் உடலுக்கு பிரதமர் மன்மோகன்சிங், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் கடுமையான பனிமூட்டத்துக்கு இடையே மாணவியின் உடல் தகனம் செய்யப்பட்டது. மாணவியின் உடல் தகனம் செய்யப்பட்டபோது பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications