கர்நாடகா காங்கிரசில் கலகக் குரல்- தலைவர் பதவி இல்லையெனில் கட்சி தாவல்- லிங்காயத்துகள் போர்க்கொடி!
பெல்லாரி: கர்நாடகா மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியை லிங்காயத்துகளுக்கு கொடுக்காவிட்டால் வேறு அரசியல் கட்சியில் இணைந்துவிடுவோம் என்று அக்கட்சிக்குள்ளேயே கலகக் குரல் எழுந்துள்ளது.
பெல்லாரியில் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடகா காங்கிரஸ் கமிட்டி பொருளாளர் சாமனூர் சிவசங்கரப்பா, லிங்காயத்துகளில் ஒருவரை கர்நாடகா மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்க வேண்டும். இதனை வலியுறுத்தி அடுத்த வாரம் லிங்காயத்து தலைவர்கள் டெல்லி செல்ல இருக்கிறோம்.
கர்நாடகா சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் லிங்காயத்துகளுக்கு இழைக்கப்பட்ட அநீதியை நிர்வர்த்தி செய்ய வேண்டிய தருணம் இது. தற்போதைய தலைவர் பரமேஸ்வராவை நீக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
கர்நாடக மாநில பாரதிய ஜனதா கட்சியில் இருந்து லிங்காயத் சமூகத் தலைவரான எதியூரப்பா விலகி கர்நாடகா ஜனதா கட்சியைத் தொடங்கியுள்ளார். இதனால் வரப்போகும் தேர்தலில் காங்கிரஸ் எப்படியும் ஆட்சியைப் பிடித்துவிடும் என்ற கனவில் இருந்து வருகிறது. இதனால்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் பொறுப்பில் இருந்து எஸ்.எம். கிருஷ்ணாவும் பதவி விலகி காங்கிரஸ் தலைமையின் உத்தரவுக்காக காத்திருக்கிறார். ஆனால் ஒக்கலிகா சமூகத்தைச் சேர்ந்த கிருஷ்ணாவை நியமித்தால் தாங்கள் வேறு கட்சியில் இணைவோம் என்று காங்கிரஸ் கட்சியின் லிங்காயத்து தலைவர்கள் போர்க் கொடி தூக்கியுள்ளனர்.
ஆனால் இந்த கோரிக்கையை காங்கிரஸ் மேலிடம் நிராகரித்தால் எதியூரப்பாவின் கட்சியில் லிங்காயத்து தலைவர்கள் இணையக் கூடும். அப்படி இணைந்தால் கர்நாடகா சட்டசபை தேர்தலில் ஒக்கலிகா சமூகத்துக்கும் லிங்காயத்து சமூகத்துக்குமான போட்டியான உருமாறக் கூடும் என்று கூறப்படுகிறது.
-
லம்பாக அமவுண்டை அமுக்கிய தலைகள்.. ராகுலுக்குப் போன மெசேஜ்! அடுத்தடுத்த ஆக்ஷனுக்கு தயாராகும் காங்.,! -
விஜயதரணியின் அடுத்த "ஜம்ப்".. விளவங்கோடு டூ தவெக மாஸ்டர் ஸ்கெட்ச்! காங்கிரஸ் எப்படி ஹேண்டில் பண்ணும் -
நாங்க உங்க கூட இல்ல ப்ரோ.. செல்வப் பெருந்தகையை கழற்றி விடும் காங்? மாணிக்கத்துக்கு வந்த திடீர் மவுசு -
கரப்பான் பூச்சி கட்சியுடன் கைகோர்க்கும் பிரகாஷ் ராஜ்! கழற்றிவிடப்பட்ட காங்கிரஸ்! பெங்களூரில் ஷாக் -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட்












Click it and Unblock the Notifications