அகமதாபாத்திலும் பாலியல் பலாத்காரம்- தற்கொலைக்கு முயன்ற சிறுமி -உயிருக்குப் போராடுகிறார்!
Subscribe to Oneindia Tamil

அகமதாபாத்தில் டோல்கா நகரில் கடந்த 6-ந் தேதி 14வயது சிறுமியை இரண்டு பேர் கொண்ட கும்பல் காரில் கடத்திச் சென்று பலாத்காரம் செய்தது. இச்சம்பவம் தொடர்பாக டிசம்பர் 14-ந் தேதியன்றுதான் போலீசில் புகார் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் அதுகுறித்து தகவலே வெளியே வராமல் இருந்தது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வயிறு வலிப்பதாகக் கூறி வந்த சிறுமி இன்று காலை விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். இதைப் பார்த்த சிறுமியின் பெற்றோர் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருக்கும் அந்த சிறுமி தற்போது உயிருக்குப் போராடி வருகிறார்.
சிறுமியை சீரழித்த கொடூரன்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications