பெண்கள் பற்றிய பேச்சுக்கு எதிர்ப்பு- மதுரை ஆதீனம் மடத்தை முற்றுகையிட்ட 50 பேர் கைது
Subscribe to Oneindia Tamil

ஆண்களின் வக்கிரப் பார்வையிலிருந்து பெண்கள் தப்ப பர்தா அணிய வேண்டும் என்று அருணகிரிநாதர் கூறியிருந்தார். அவரது இந்த பேச்சுக்கு பெண்கள் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
அருணகிரிநாதரைக் கண்டித்து இன்று காலை அகில இந்திய மாதர் சங்கம், ஜனநாயக வாலிபர் சங்கம் போன்ற அமைப்பினர் மதுரை ஆதீன மடத்தை முற்றுகையிட்டு முழக்கங்களை எழுப்பினர். இதைத் தொடர்ந்து ஆதீனத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய 50 பேர் கைது செய்யப்பட்டனர்.
தமது பேச்சுக்கு மன்னிப்பு கேட்கும்வரை போராட்டம் தொடரும் என்று பெண்கள் அமைப்பினர் அறிவித்திருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications