அமெரிக்காவில் சுரங்க ரயிலில் தள்ளி இந்தியர் கொலை- கொலை செய்த பெண் சிக்கினார்!

அமெரிக்க குயின்ஸ் பகுதியில் மூன்று நண்பர்களுடன் வசித்து வந்த இந்தியர் சுனந்தோ சென், அங்கு பிரிண்டிங் தொழில் செய்து வந்தார். கடந்த வியாழன் அன்று குயின்ஸ் சுரங்க ரயிலில் பயணிக்க சென்றபோது அடையாளம் தெரியாத ஒரு பெண், அவரை எதிரே வந்த ரயிலில் தள்ளிக்கொன்றார். பின்னர் அங்கிருந்து அவர் தப்பித்து சென்றார்.
ரயில் பாதையில் அமைக்கப்பட்டிருந்த வீடியோ காமிராவில் அந்த பெண் உருவம் பதிவாகியிருந்ததை போலீசார் கண்டுபிடித்து வெளியிட்டனர். அந்த பெண் கொலையாளி பற்றி துப்பு கொடுப்பவருக்கு 12,000 டாலர் சன்மான் வழங்கப்படும் என்றும் போலீஸ் அறிவித்திருந்தது.
தற்போது இந்தக் கொடூரக் கொலையை செய்ததாக எரிகா என்ற 31 வயது பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். 2001-ம் ஆண்டு நியூயார்க் மீதான தாக்குதலைத் தொடர்ந்து தமக்கு இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் மீது வெறுப்பு ஏற்பட்டது. இதனாலே இந்தியரான சுனந்தோ சென்யை ரயிலில் தள்ளிக் கொலை செய்ததாக அப்பெண் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.
இந்த வழக்கில் குற்றம்நிரூபிக்கப்படும் நிலையில் அந்த பெண்ணுக்கு சுமார் 25 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கக் கூடும்.












Click it and Unblock the Notifications