கடத்திச் சென்ற 21 பாக். ராணுவத்தினரை சுட்டுக் கொன்ற தலிபான்
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்: பாகி்தானின் பெஷாவர் அருகே 21 ராணுவ வீரர்களை தலிபான் தீவிரவாதிகள் சுடடுக் கொன்றுள்ளனர்.
இவர்களை செக்போஸ்ட்டிலிருந்து தீவிரவாதிகள் கடத்திச் சென்றிருந்தனர். பின்னர் அனைவரையும் மொத்தமாக நிற்க வைத்து சுட்டுக் கொன்று விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

சுட்டுக் கொல்லப்பட்ட ராணுவ வீரர்களின் உடல்களை ஜபாய் என்ற பகுதியில் போலீஸார் கணடுபிடித்துள்ளனர். அனைவரையும் கிரிக்கெட் மைதானத்திற்குக் கூட்டிச் சென்று தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றதாக தெரிகிறது.
இந்த சம்பவத்தால் பெஷாவர் பகுதியில் பரபரப்பும், பதட்டமும் நிலவுகிறது.












Click it and Unblock the Notifications