டெல்லியில் தொடரும் பயங்கரம்: காதலை கைவிட்ட இளம்பெண் குத்திப் படுகொலை
டெல்லி: பாலியல் பலாத்காரத்தில் மருத்துவ மாணவி பலியான ரணம் ஆறிவிடாத நிலையில் தலைநகர் டெல்லி மற்றொரு கோர சம்பவத்தை நேற்று இரவு சந்தித்திருக்கிறது. தம்மை காதலித்து கைவிட்ட பெண்ணை இளைஞன் ஒருவன் அடித்தும் கத்தியால் குத்தியும் கொன்றிருக்கிறான்.
டெல்லியைச் சேர்ந்த இளம் பெண் நேஹா யாதவ் தமது நண்பர் கெளரவ் குமாருடன் நேற்று மாலை பணி முடிந்து காரில் திரும்பியிருக்கிறார். அப்போது அந்த காரை வழிமறுத்த நேஹாவின் முன்னாள் காதலன் தேவேந்தர், இருவரையும் சரமாரியாகத் தாக்கியிருக்கிறான். நேஹாவை கத்தியால் குத்தியும் இருக்கிறான் அவன். இதை அருகில் இருந்து பார்த்தோர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்திருக்கின்றனர்.
மேலும் கடுமையான தாக்குதலுக்குள்ளான இருவரும் லால் பகதூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் செல்லும் வழியிலேயே இளம்பெண் நேஹா உயிரிழந்துவிட்டார்.
சம்பவ இடத்திலேயே தேவேந்தர் சிக்கியிருக்கிறான். அவனை கைது செய்த பொலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications