டெல்லி: டெல்லி பாலியல் பலாத்கார சம்பவத்தின் துக்கம் இன்னும் மறையாததால் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தனது புத்தாண்டுக் கொண்டாட்டங்களை ரத்து செய்துவிட்டார். தன்னை வாழ்த்த யாரும் வர வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
தற்போது அவர் ஹைதராபாத்தில் உள்ள ராஷ்டிரபதி நிலையத்தில் தங்கியுள்ளார் பிரணாப். இதுகுறித்து ராஷ்டிரபதி பவன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், சமபத்தில் டெல்லியில் இளம் பெண் ஒருவர் பாலியல் பலாத்காரத்திற்குள்ளாகி உயிரிழந்த சம்பவத்தின் தொடர்ச்சியாக, புத்தாண்டைக் கொண்டாடுவதில்லை என்று குடியரசுத் தலைவர் முடிவு செய்துள்ளார்.
என்னை தன்னை வாழ்த்த யாரும் வர வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார் என்று கூறப்பட்டிருந்தது.
ஏற்கனவே காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் புத்தாண்டுக் கொண்டாட்டத்தை ரத்து செய்து விட்டார் என்பது நினைவிருக்கலாம்.
In the backdrop of the gangrape of a girl here, President Pranab Mukherjee has decided to cancel all New Year celebrations and appealed to the people not come to greet him at 'Rashtrapati Nilayam' in Hyderabad, one of his two official retreats. "In view of the recent tragic event leading to the loss of a young girl, the President has decided not to take part in any celebration of the New year.