மார்ச் 1ம் தேதி முதல் பிளஸ் டூ பொதுத் தேர்வு- மார்ச் 27 முதல் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு!
சென்னை: பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டிருக்கிறது.
பிளஸ் 2 செய்முறைத் தேர்வு பிப்ரவரி 2-வது வாரத்தில் தொடங்குகிறது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 27ம் தேதி தொடங்கி ஏப்ரல் 12-ம் தேதி வரை நடைபெறுகிறது.
பிளஸ் 2 பொதுத்தேர்வை சுமார் 8 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர். பத்தாம் வகுப்பு தேர்வில் 10.5 லட்சம் மாணவர்கள் பங்கேற்கிறார்கள்.
பிளஸ் 2 அட்டவணை:
மார்ச் 1 - மொழித்தாள் ஒன்று, மார்ச் 4 - மொழித்தாள் இரண்டு,
மார்ச் 6 - ஆங்கிலம் முதல் தாள், மார்ச் 7 - ஆங்கிலம் இரண்டாம் தாள்,
மார்ச் 11 - இயற்பியல், பொருளியல் ; மார்ச் 14 - கணிதம், விலங்கியல், நுண்ணுயிரியல்
மார்ச் 15 - வணிகவியல், வீட்டு அறிவியல் ; மார்ச் 18 - வேதியியல், கணக்கியல்
மார்ச் 21 - உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிக கணிதம்.
பத்தாம் வகுப்பு தேர்வு அட்டவணை:
மார்ச் 27 - மொழித்தாள் ஒன்று; மார்ச் 28 - மொழித்தாள் இரண்டு
ஏப்ரல் 1 - ஆங்கிலம் முதல் தாள், ஏப்ரல் 2 - ஆங்கிலம் இரண்டாம் தாள்
ஏப்ரல் 5 - கணிதம்'; ஏப்ரல் 8 - அறிவியல்
ஏப்ரல் 12 - சமூக அறிவியல்.












Click it and Unblock the Notifications