டெல்லியில் பாலியல் குற்றங்களை விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள் தொடங்கப்பட்டன!
டெல்லி: பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை விசாரிக்கும் விரைவு நீதிமன்றங்கல் டெல்லியில் செயல்படத் தொடங்கியுள்ளன
விரைவு நீதிமன்றங்கள்
டெல்லியில் சாகெத், துவாரகா, ரோகிணி, திஸ் ஹசாரி ஆகிய இடங்களில் விரைவு நீதிமன்றங்களை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீர் தொடங்கி வைத்தார்.
அப்போது பேசிய அவர், பலாத்கர சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளிடம் விசாரணை நடத்த வேண்டிய தேவை இல்லை. அவர்களை எங்களிடம் ஒப்படையுங்கள். நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று பொதுமக்கள் அபாயகரமான முறையில் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினார்கள்.
எனவே, இந்த வழக்கை மக்கள் உன்னிப்பாக கவனித்து வருவதால் எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவாக வழக்கை விசாரித்து முடிக்க வேண்டும். ஒவ்வொரு சாமானிய மனிதனுக்கும் பின்னால் நீதித்துறை உள்ளது என்பதை நாம் வெளிப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
பலாத்கார வழக்கு
டெல்லி சாக்தெத் விரைவு நீதிமன்றத்தில் மருத்துவ மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு வருகிறது. டெல்லியில் கடந்த டிசம்பர் 16-ந் தேதி ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பின்னர் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
இந்த விரைவு நீதிமன்றத்தில் பலாத்கார சம்பவ வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட இருக்கிறது. 30 பேர் இந்த வழக்கில் சாட்சிகளாக சேர்க்கப்பட்டு உள்ளனர். இந்த வழக்கில் இன்றே விசாரணை தொடங்குகிறது.
இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராக மாட்டார்கள் என்று சாகெத் மாவட்ட பார் கவுன்சில் உறுப்பினர் சஞ்சய் குமார் தெரிவித்தார். குற்றச்சாட்டில் இருந்து அவர்களை பாதுகாக்க முயன்றால் அது தார்மீக நெறிமுறைகளுக்கு முரணானது என்றும் அவர் கூறினார்.
-
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்!












Click it and Unblock the Notifications