ஃபேஸ்புக்கில் வெளியான டெல்லியில் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணின் படம் போலி
Subscribe to Oneindia Tamil
டெல்லி: டெல்லியில் ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணின் படம் என்று ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் வெளியான புகைப்படம் போலியானது என்று தெரியவந்துள்ளது.
டெல்லியில் பலாத்காரம் செய்ததில் பலியான மாணவியின் புகைப்படம் என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் சில நாட்களாக ஒரு புகைப்படம் உலவிக் கொண்டிருந்தது. இருப்பினும் இந்தப் புகைப்படத்தின் உண்மைத்தன்மை உறுதிப்படுத்தப்படவில்லை.
இந்த நிலையில் அந்தப் புகைப்படத்தில் இருக்கும் பெண் கேரளாவைச் சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது. இது தொடர்பாக கேரள சைபர் பிரிவில் அப்பெண்ணின் தந்தை புகார் கொடுத்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications