பலாத்கார சம்பவத்துக்கு கண்டனம்: புதுவையில் களம் இறங்கிய கல்லூரி மாணவர்கள்-10 இடங்களில் மறியல்!
புதுச்சேரி: பிளஸ் டூ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தால் புதுச்சேரியில் கொந்தளிப்பான நிலைமை நீடித்து வருகிறது. அனைத்து கல்லூரி மாணவர்களும் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதுவையில் இன்று 10 இடங்களில் போராட்டம் நடைபெற்றது.
மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவமானது புதுவையில் அனைத்து அரசியல் கட்சிகள், இயக்கங்களை வீதியில் இறக்கிவிட்டிருக்கிறது. இச்சம்பவத்தால் மாநிலமே கொந்தளித்துக் கிடக்கிற போதும் மாநில முதல்வர் ரங்கசாமி இதுவரை எந்த ஒரு அனுதாபத்தையும் தெரிவிக்கவில்லை.
இதனிடையே இன்று காலை வகுப்புகளைப் புறக்கணித்த அனைத்து கல்லூரி மாணவர்களும் மாணவி அனுமதிக்கப்பட்டிருக்கும் மருத்துவமனை முன்பாக ஒன்று திரண்டு பலாத்கார சம்பவத்துக்கு நீதி கோரி முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.
இந்தப் போராட்டத்தின் போது சுமார் 10 மாணவிகள் மயக்கமடைந்தனர். இவர்களில் மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். தொடர்ந்தும் அவர்களது முற்றுகைப் போராட்டம் நீடித்து வருகிறது. தற்போது மாணவர்களுக்கு ஆதரவாக பல்வேறு இயக்கங்கள், கட்சிகளின் பிரதிநிதிகளும் திரண்டுள்ளனர்.
புதுவையில் இன்று 10 இடங்களில் மறியல் போராட்டம் நடைபெற்றது. மாணவியின் சொந்த ஊரான திருபுவனை, மதகடிப்பட்டு, திருவண்டார்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுபோல பா.ம.க. சார்பில் ஐ.ஜி. அலுவலகம் முன்பும், ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் சுப்பையா சிலை முன்பும், மாணவர் பெருமன்றம் மற்றும் இளைஞர் பெருமன்றம் சார்பில் அண்ணாசாலையில் பிலால் ஓட்டல் அருகிலேயும் மறியல் போராட்டம் நடைபெற்றது.
இதுபோல் புதுவையில் பல்வேறு பகுதிகளிலும் மறியல், ஆர்ப்பாட்டம், தர்ணா உள்ளிட்ட போராட்டங்கள் நடைபெற்றன.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications