புதுவை பலாத்கார சம்பவம்: பாதிக்கப்பட்ட மாணவி 10-ம் வகுப்பில் 480 மார்க் எடுத்தவர்!
புதுச்சேரி: புதுச்சேரியில் பாலியல் பலாத்காரத்துக்குள்ளான மாணவி 10-ம் வகுப்பில் 480 மதிப்பெண் எடுத்தவர் என்றும் அவருக்கு ஏற்பட்ட இந்தக் கதியால் அம்மாணவி பிளஸ் டூ தேர்வு எப்படி எழுதப் போகிறாரோ என்றும் அவரது தந்தை நாகராஜ் குமுறியுள்ளார்.
தமது மகளுக்கு நேர்ந்த நிலைமையை தாங்கிக் கொள்ள முடியாமல் தீக்குளித்து தற்கொலை செய்ய முன்ற தந்தை நாகராஜ் கூறுகையில், எனது மகள் நன்றாக படிக்கக் கூடியவள். 10-ம் வகுப்பில் 480 மதிப்பெண் எடுத்திருந்தார். அவளை மருத்துவம் படிக்க வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டோம். நேற்று முன் தினம் வெளியே சென்றவள் இரவு வரை வீடு திரும்பாததால் போலீசில் புகார் கொடுத்தோம். ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
நேற்று காலை எனது மகள் விழுப்புரம் பஸ் நிலையத்திலிருந்து ஒரு ரூபாய் காயின் போன் மூலம் என்னிடம் தொடர்பு கொண்டு பேசினாள். பேருந்து நிலையத்தில் மயங்கிய நிலையில் இருக்கிறேன் உடனே வந்து அழைத்து செல்லுங்கள் என்று கூறினாள். நாங்கள் அங்கு சென்று அழைத்து வந்தோம்.
என் மகளுக்கு போலீசார் தொல்லை கொடுத்து வருகின்றனர். என்னையும் என் மனைவியையும் மகள் சிகிச்சை பெறும் இடத்திற்குள் அனுமதிக்கவில்லை. என் மகளுக்கு பலாத்காரம் நடக்காதது போலவும் இவளே தானாக அந்த இளைஞர்களை சென்று சந்தித்தது போலவும் சித்தரிக்க முயற்சிக்கின்றனர். இதற்காக கட்டாயப்படுத்தி வாக்குமூலம் வாங்க முயற்சி நடக்கிறது. இதை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும். என் மகளை பலாத்காரம் செய்தவர்களுக்கு கடும் தண்டனை பெற்று தர வேண்டும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications