சபரிமலைக்கு செல்லும் வழியில் வேன் கவிழ்ந்து சென்னை ஐயப்ப பக்தர் பலி
தென்காசி: கேரள மாநிலம் தென்மலையில் வேன் கவிழ்ந்ததில் சென்னையைச் சேர்ந்த ஐயப்ப பக்தர் பரிதாபமாக இறந்தார்.
சென்னை வில்லிவாக்கம் ராஜமங்கலம் பகுதியைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் 30 பேர் சபரிமலைக்கு செல்ல ரயில் மூலம் தென்காசி வந்தனர். பின்னர் இங்கிருந்து சபரிமலைக்கு 2 வேன்களில் புறப்பட்டு சென்றனர். அதில் ஒரு வேன் கேரள மாநிலம் தென்மலையில் சென்று கொண்டிருந்தது.
மலை பிரதேசமான இப்பகுதியில் உள்ள ஒரு வளைவில் வேன் சென்றபோது எதிரே வந்த வாகனத்திற்கு இடம் கொடுப்பதற்காக டிரைவர் வேனை ரோட்டின் ஓரமாக ஓட்டியுள்ளார். அப்போது திடீரென அருகில் உள்ள பள்ளத்தில் வேன் கவிழ்ந்துவிட்டது. இதில் வேனில் சென்ற 14 ஐயப்ப பக்தர்கள் படுகாயமடைந்தனர். உடனடியாக அவர்கள் புனலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அன்பு என்பவர் பரிதாபமாக இறந்தார்
இச்சம்பவம் பற்றி தென்மலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications