ஜெ.வை கடுமையாக விமர்சித்துப் பேசிய சம்பத் - வாபஸான வழக்குகள் குறித்து பரபரப்புத் தகவல்!

மதிமுகவில் கொள்கை விளக்க அணிச் செயலாளராக இருந்து வந்தவர் நாஞ்சில் சம்பத். இந்த நிலையில் அவருக்கும், வைகோவுக்கும் இடையே உரசல் ஏற்பட்டது. இது பெரிதாகி வெடித்தபோது நாஞ்சில் சம்பத் அதிமுகவுக்கு வந்து விட்டார். அவருக்கு துணை கொள்கைப் பரப்புச் செயலாளர் பதவியையும், இன்னோவா காரையும் பரிசாக கொடுத்தார் ஜெயலலிதா.
இந்த நிலையில் தற்போது நாஞ்சில் சம்பத் மீதான 3 அவதூறு வழக்குகளையும் வாபஸ் பெற்றுள்ளது அதிமுக அரசு. இந்த வழக்குகளை வாபஸ் பெறுவதற்கு அனுமதி கோரி சென்னை முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில் அரசு வழக்கறிஞர் ஜெகன் நேற்று மனு செய்தார்.
இந்த மூன்று வழக்குகளும் என்னென்ன என்ற விவரம் இதோ...
2002ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஒரு வருடத்திற்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அப்போது அதைக் கண்டித்து நாஞ்சில் சம்பத் பல்வேறு கூட்டங்களில் பேசினார்.
சென்னையில், 20.1.2003 மற்றும் 21.1.2003 ஆகிய தேதிகளில் சென்னை தம்பு செட்டி தெரு, வேப்பேரி தானாதெருவில் நடந்த பொதுக்கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் பேசினார். இதேபோல 17.4.2004 அன்று வில்லிவாக்கத்தில் நடந்த பொதுக்கூட்ட நிகழ்ச்சியிலும் சம்பத் பேசினார். இந்த மூன்று கூட்டங்களிலும் முதல்வர் ஜெயலலிதாவைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார் சம்பத்.
ஜெயலலிதாவை கடுமையாக கண்டித்ததோடு, சரமாரியாக விமர்சித்தும் பேசிய இந்த மூன்று வழக்குகளைத்தான் தற்போது அதிமுக அரசு திரும்பப் பெறுகிறது. ஜெயலலிதாவை கடுமையாக விமர்சித்துப் பேசிய சம்பத் மீதான வழக்குகளை அதிமுக அரசு வாபஸ் பெறுவது அதிமுகவினர் மத்தியிலேயே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி












Click it and Unblock the Notifications