மன வளர்ச்சி குன்றிய பெண்ணை பலாத்காரம் செய்த 2 சிஆர்பிஎப் வீரர்கள்

Subscribe to Oneindia Tamil

குவஹாத்தி: அஸ்ஸாம் மாநிலம் வடக்கு லக்கிம்பூர் என்ற மாவட்டத்தில் மன வளர்ச்சிக் குன்றிய பெண்ணை தூக்கி் சென்று பலாத்காரம் செய்துள்ளனர் இரண்டு மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த வீரர்கள். அதில் ஒருவரைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.

வியாழக்கிழமை இரவு இச்சம்பவம் நடந்துள்ளது. லக்கிம்பூர் நகரில் உள்ள செளல்துவா என்ற இடத்தில் மன வளர்ச்சிக் குன்றிய ஒரு மாற்றுத் திறனாளி பெண் சாலையில் தனியாகநடந்து போய்க் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த 2 சிஆர்பிஎப் வீரர்கள் அப்பெண்ணை பலவந்தமாக தூக்கிக் கொண்டு அருகில் இருந்த தனிமையான பகுதிக்குக் கொண்டு சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இதுதொடர்பாக வந்த புகாரைத் தொடர்ந்து விசாரணை நடத்திய போலீஸார் மோகன் சிங் என்பவரை கைது செய்துள்ளனர். இன்னொருவரைத் தேடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+