'கலர்புல்' கும்பமேளா... பக்தர்கள் கூட்டத்தால் குலுங்கும் அலகாபாத்
அலகாபாத்: உலகிலேயே மிகப் பெரிய ஆன்மீக விழா என்று வர்ணிக்கப்படும் கும்பமேளா அலகாபாத்தில் களை கட்டியுள்ளது. இதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சாதுக்கள் குவிந்து வருகின்றனர். வெளிநாட்டுப் பயணிகளும் பெரும் திரளாக வந்த வண்ணம் உள்ளனர்.
பக்தி, மத பாரம்பரியம் என்று பல்வேறு விதமான கலவைகளுடன் கூடிய கும்பமேளா அலகாபாத்தில் களை கட்டியுள்ளது. திரிவேணி சங்கமம் என்று அழைக்கப்படும் கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி ஆகிய மூன்று ஆறுகளும் சங்கமிக்கும் இடத்தில் கும்பமேளா நடக்கிறது.
நாட்டின் அனைத்து மூலைகளிலிருந்தும் சாதுக்களும், பக்தர்களும் குவிந்து வருகின்றனர். இதனால் அலகாபாத் நகரமே திருவிழாக்கோலம் பூண்டு காணப்படுகிறது.

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த கும்பமேளா நடைபெறுகிறது. இதுதான் உலகிலேயே அதிக அளவிலான பக்தர்களை ஈர்க்கும் மத விழாவாகும்.

10 கோடி பக்தர்கள்
அலகாபாத் கும்பமேளாவுக்கு கிட்டத்தட்ட 10 கோடி பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அதற்கேற்ற வகையில் விரிவான பாதுகாப்பு, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

நாகா சாதுக்கள்
பிரபலமான நாகா சாதுக்கள் உள்பட பல்வேறு வகையான சாதுக்களை கும்பமேளாவில் பார்க்க முடியும். இந்தியாவின் விதம் விதமான சாதுக்கள் கூட்டத்தையும் இங்கு ஒருசேர பார்க்கலாம். வெளிநாட்டுப் பயணிகளும் ஏராளமான பேர் வருவார்கள்.

ஜனவரி 14ல் மகர சங்கராந்தி
கும்பமேளாளவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்று ஜனவரி 14ம் தேதி நடைபெறும் மகர சங்கராந்தி விழா. அன்றைய தினம் கங்கை, யமுனை, சரஸ்வதி, காவிரி, கிருஷ்ணா ஆகிய ஆறுகளில் புனித நீராடுவது வழக்கம். கும்பமேளாவையொட்டி அன்றைய தினம் லட்சக்கணக்கானோர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவார்கள்.

ஜனவரி 27 பவுஸ் பூர்ணிமா
பெளர்ணமி தினமான ஜனவரி 27ம் தேதியன்று சாதுக்களும், லட்சக்கணக்கான பயணிகளும் புனித நீராடுவர்.

மெளனி அமாவாசை ஸ்னான்
பிப்ரவரி 10ம் தேதி, மெளனி அமாவாசை ஸ்னான் எனப்படும் புனித நீராடுதல் நிகழ்ச்சி நடைபெறும். அதிலும் லட்சக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள்.

மேலும் விவரங்களுக்கு
அலகாதாபாத் கும்பமேளா குறித்த மேலும் விவரங்கள் தெரிய வேண்டுவோர், கீழ்க்கண்ட இணையதளத்திற்குச் சென்று அறிந்து கொள்ளலாம்












Click it and Unblock the Notifications