எம்.எல்.ஏ. பதவியே போதும்... : 'அடாவடி' குஜ்ராத் எம்.பி. ரடாடியா அதிரடி முடிவு!
போர்பந்தர்: அரசியல்வாதிகள் எம்.எல்.ஏ.வாகி எம்.பி.யாகி அப்படியே.. மத்திய அமைச்சராகி... என்றுதான் கணக்குப் போட்டு கனவு காண்பர். ஆனால் குஜராத் மாநில காங்கிரஸ் எம்.பி.யோ எம்.எல்.ஏ.பதவியே போதும் என்று அடம்பிடித்திருக்கிறார்.
குஜராத் மாநிலம் வதோதராவில் சுங்கச்சாவடியில் துப்பாக்கியைக் காட்டி ஊழியர்களை மிரட்டிய சர்ச்சையில் சிக்கியவர் காங்கிரஸ் எம்.பி.யான ரடாடியா. அண்மையில் நடைபெற்ற சட்டசபை தேர்தல் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடவும் வாய்ப்பளிக்கப்பட்டது. ரடாடியாவும் போட்டியிட்டு வெற்றியும் பெற்றுவிட்டார்.
எம்.பி மற்றும் எம்.எல்.ஏ. எஅன இரண்டு பதவிகளை வைத்திருக்கும் ரடாடியா ஏதாவது ஒன்றை ராஜினாமா செய்துதான் ஆக வேண்டும் என்ற நிலையில் மனிதர் இன்று தமது எம்.பி. பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.
ராஜினாமா கடிதத்தை மக்களவை சபாநாயகருக்கு அனுப்பி வைத்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், ‘எம்.எல்.ஏ.வாக இருப்பதால், இங்கேயே தங்கி மக்களுக்காக பணியாற்ற முடிவு செய்திருக்கிறேன். எனவே, மக்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
இதேபோல் குன்வார்ஜி பவாலியா என்ற எம்.பி.யும் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார். ஆனால் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications