எல்லையைத் தாண்டும் பெண்கள் அதற்கான விலையை கொடுக்க வேண்டும்: பாஜக அமைச்சர்

Subscribe to Oneindia Tamil

Kailash Vijayvargiya
டெல்லி: எல்லையைத் தாண்டி போனால் பெண்கள் அதற்கான விலையை கொடுக்கத் தான் வேண்டும் என்று மத்திய பிரதேச பாஜக கேபினட் அமைச்சர் கைலாஷ் விஜய்வர்கியா தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேச மாநில கேபினட் அமைச்சராக இருப்பவர் பாஜகவைச் சேர்ந்த கைலாஷ் விஜய்வர்கியா. அவர் ஒரு கருத்தை தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அதவாது பெண்கள் எல்லையைத் தாண்டினால் அதற்கான விலையை கொடுத்துத் தான் ஆக வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

தனது கருத்துக்கு பலமாக ராமாயணத்தில் இருந்து சில வரிகளை வேறு குறிப்பிட்டுள்ளார். அதாவது சீதை லக்ஷ்மணன் போட்ட கோட்டைத் தாண்டியதால் தான் ராவணனால் கடத்திச் செல்லப்பட்டார் என்று தெரிவித்துள்ளார். எல்லையைத் தாண்டும் பெண்களுக்கு தக்க தண்டனை தேவை தான் என்று கைலாஷ் கூறியுள்ளது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் அவர்களாக வரவழைத்துக்கொள்வது தான் என்றும் தெரிவித்துள்ளார்.

இது போன்ற கருத்துகளை அரசியல் தலைவர்கள் தெரிவிப்பது ஒன்றும் இது முதல் முறையன்று. மேலும் பெண்கள் பாதுகாப்பு குறித்து பேசிய பெண் விஞ்ஞானி ஒருவர் இரவு நேரத்தில் ஆண் நண்பருடன் ஊற்றி சுற்றினால் கற்பழிக்கத் தான் செய்வார்கள் என்று கூறி அதிர வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கு வங்க மாநிலத்தில் நடந்த கற்பழிப்பு குறித்து கேட்டதற்கு அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜி கூறுகையில், இது எனக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் செய்யும் சதி என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+