சாலை விபத்து.. தாய் கண் முன்னே சிறுமி தலை நசுங்கி பலி... ஸ்ரீவில்லிபுத்தூரில் பயங்கரம்
ஸ்ரீ வில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன் கோவிலில் இருசக்கர வாகனத்தில் சென்ற பேராசிரியை மீது தனியார் பேருந்து மோதியதில் கண் எதிரிலேயே குழந்தை தலை நசுங்கி உயிரிழந்தது.
ஸ்ரீவில்லிபுத்தூர்-கிருஷ்ணன்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் இந்திராநகர் அருகேயுள்ள அண்ணாநகரில் குடியிருந்து வருபவர் கவிதா (33). இவர் கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் துறையில் பேராசிரியையாக வேலை செய்து வருகிறார். இவரது கணவரும் சென்னையில் பேராசிரியராக உள்ளார்.
இவர்களுக்கு பிரதிக்ஷா (4), ஹர்ஷிதா (3) என்ற இரு குழந்தைகள் உண்டு. இருவரும் கிருஷ்ணன்கோவிலில் உள்ள தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் எல்.கே.ஜி மற்றும் ப்ரிகேஜி படித்து வருகின்றனர். வழக்கமாக பள்ளிப் பேருந்தில்தான் இருவரும் பள்ளிக்குச் செல்வார்கள். இன்றைக்கு கவிதா, தன்னுடைய மூத்த மகள் பிரதிக்ஷாவை தன்னுடைய தனது இரு சக்கர வாகனத்தில் கூட்டிச் சென்றுள்ளார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்-கிருஷ்ணன்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பள்ளியில் பிரதிக்ஷாவை இறக்கிவிடுவதற்காக சென்ற கவிதா வாகனத்தை ஒரு புறத்தில் இருந்து மற்றொரு புறத்திற்கு திருப்பியுள்ளார். அப்போது பின்னால் வந்த தனியார் பஸ், இரு சக்கர வாகனத்தின் பின்புறம் மோதியது. இதில் கீழே விழுந்த பிரதிஷாவின் தலையில் பஸ்ஸின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் தலை நசுங்கி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தாயின் கண் எதிரிலேயே குழந்தை உயிரிழந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியது.
இந்த விபத்துத் தொடர்பாக கிருஷ்ணன்கோவில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications