அறுக்க முயன்று, கைவிடப்பட்டு மறுபடியும் புதுப்பிக்கப்பட்ட அண்ணா வளைவு திறப்பு!
சென்னை: மறைந்த எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் பிரமாண்டமாகவும், கம்பீரமாகவும் கட்டப்பட்ட அண்ணா வளைவு மீண்டும் புதுப்பிக்கப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டது.
சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கடந்த 1985-ம் ஆண்டு எம்ஜிஆர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டு திறக்கப்பட்டது பிரமாண்ட அண்ணா வளைவு. அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், பாலம் கட்ட தீர்மானிக்கப்பட்டது. இதற்காக அண்ணா வளைவை இடிக்க முடிவெடுக்கப்பட்டது.
இதற்குப் பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பின. இருப்பினும் அண்ணா வளைவை இடிக்கும் பணிகள் தொடங்கின. வளைவை இடிக்க முடியாது என்பதால் அதை அப்படியே அறுத்து தூக்கி எடுக்க முடிவு செய்து வேலைகளில் இறங்கினர். ஆனால் வேலை தொடங்கிய பின்னர்தான் தெரிந்தது, வளைவை அறுப்பது மிகவும் கடினம் என்று.
இதையடுத்து முதல்வர் ஜெயலலிதா வளைவை நேரில் வந்து பார்த்தார். பின்னர் அதை அகற்றும் பணிக்குத் தடை விதித்தார். வளைவை அகற்றாமல் பாலம் கட்டுமாறும் உத்தரவிட்டார்.
மேலும் பாதி அறுபட்ட வளைவை சரி செய்ய, ரூ. 67 லட்சம் ஒதுக்கீடு செய்தும் உத்தரவிட்டார். இதையடுத்து அறுக்கப்பட்ட வளைவை சரி செய்யும் பணிகள் தொடங்கின.இந்தப் பணிகள் முடிவடைந்தைத் தொடர்ந்து இன்று காலை அதை நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் சாமுவேல் எபநேசர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.












Click it and Unblock the Notifications