For Daily Alerts
Just In
முன்னாள் அமைச்சர் அய்யாறு வாண்டையார் மனைவி மரணம்: ஜெயலலிதா இரங்கல்
தஞ்சை: முனனாள் அமைச்சர் அய்யாறு வாண்டையார் மனைவி ஆனந்த வள்ளியம்மாள் காலமானார். அவரது மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது,
தஞ்சாவூர் வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.அய்யாறு வாண்டையார் மனைவி ஆனந்த வள்ளியம்மாள் உடல் நலக்குறைவு காரணமாக மரணடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றேன்.
மனைவியை இழந்து வாடும் அன்புச் சகோதரர் அய்யாறு வாண்டையாருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
Comments
English summary
Former ADMK minister Ayyaru Vandayar's wife passed away. CM Jayalalithaa expressed her deepest condolences to the bereaved family.
Story first published: Friday, January 4, 2013, 12:33 [IST]