முந்திக் கொண்ட பொட்டு சுரேஷ்: காட்டத்தில் திமுக இளம் தலைவர்
சென்னை: மத்திய அமைச்சர் முக அழகிரியின் பிறந்தநாள் வருவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே அவரை வாழ்த்தி முரசொலியில் விளம்பரம் கொடுத்துள்ளார் மதுரை திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பொட்டு சுரேஷ்.
மதுரை திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பொட்டு சுரேஷ். அவர் மத்திய அமைச்சர் முக அழகிரிக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதை தமிழகம் அறியும். கடந்த திமுக ஆட்சியில் பிரபலமானவராக இருந்த பொட்டு சுரேஷின் நிலைமை அதிமுக ஆட்சிக்கு வந்ததும் தலைகீழாக மாறிவிட்டது.
அவர் மீது பல்வேறு வழக்குள் பதிவு செய்யப்பட்டதுடன் அவர் கைது செய்யப்பட்டார். பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்ட அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. ஆனால் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்தது செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்தது. இந்நிலையில் வரும் 30ம் தேதி அழகிரியின் பிறந்தநாள் விழாவை வெகு விமரிசையாக கொண்டாட மதுரை திமுக முடிவு செய்துள்ளது.
இந்த நிலையில் டிசம்பர் 30ம் தேதியே மு.க.அழகிரியை வாழ்த்தி திமுகவின் அதிகாரபூர்வ ஏடான முரசொலியில் விளம்பரம் வெளிவந்துவிட்டதாம். இதைக் கண்ட அழகிரி ஆதரவாளர்கள் குஷியானார்கள். ஆனால் இந்த சம்பவங்கள் குறித்து கேள்விப்பட்ட திமுக இளம் தலைவர் ஒருவர் மிகவும் கோபத்தில் உள்ளதாக கூறப்படுகின்றது.