பெருகி வரும் பாலியல் பலாத்காரங்கள்.. கோபத்தில் தீக்குளித்த பல்லடம் இளைஞர்
கோவை: பெருகி வரும் பாலியல் பலாத்காரங்களை தடுக்கக் கோரி திருப்பூர் மாவட்டம் பல்லடத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் தீக்குளித்த செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவரது பெயர் ராஜு. டீக்கடை நடத்தி வருகிறார். டெல்லி பாலியல் பலாத்காகரம் குறித்த செய்தியும், அதைப் போன்ற பல்வேறு செய்திகளும் அவரை பெரும் சோகத்தில் ஆழ்த்தின, அதிருப்தியில் மூழ்கியிருந்தார்.
இந்த நிலையில் அவர் பல்லடம் கோர்ட்டுக்கு மண்ணெண்ணையுடன் வந்தார். அங்கு நின்று கொண்டு பாலியல் பலாத்காரச் செயல்களை தடுக்க வேண்டும், குற்றவாளிகளுக்கு கடும் தணட்னை கொடுக்க வேண்டும் என்று கோஷமிட்டபடி உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீவைத்துக் கொண்டார்.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்களும், போலீஸாரும் அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவருக்கு பல்லடம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் கோவை அரசு பொது மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டார்.