டெல்லி கற்பழிப்பு சம்பவத்திற்கு சுனிதா வில்லியம்ஸ் கடும் கண்டனம்

டெல்லியில் ஓடும் பேருந்தில் 6 பேர் கொண்ட கும்பலால் கற்பழிக்கப்பட்டு தாக்கப்பட்ட மாணவி கடந்த 29ம் தேதி சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்நிலையில் புனேவைச் சேர்ந்த மாணவர்களிடம் வீடியோ கான்பிரன்ஸிங் முறை மூலம் பேசிய விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியமஸ் கூறுகையில்,
இந்தியாவில் பெண்களுக்கு மதிப்பில்லாதது தான் கற்பழிப்பு சம்பவங்களுக்கு காரணம். டெல்லியில் ஓடும் பேருந்தில் மாணவி கற்பழிக்கப்பட்ட சம்பவம் கடும் கண்டனத்திற்குரியது. இந்தியாவில் ஆண்கள் பெண்களிடம் நடந்து கொள்ளும் முறை வருத்தமளிக்கிறது. அனைத்து துறைகளிலும் ஆண்களுக்கு நிகராக பெண்கள் கௌரவிக்கப்படாதது பொறுப்பற்ற செயல் என்று நான் நினைக்கிறேன்.
ஆண்கள் ஆதிக்கமுள்ள இந்த துறையில் நான் அவர்களுக்கு ஈடாக செயல்பட முயற்சிக்கிறேன். ஆனால் ஆண்களை விட பெண்கள் அளவில் குறைந்தவர்கள். அதை ஒன்றும் செய்ய முடியாது. இந்தியாவில் இருந்து ஏராளமான விண்வெளி வீரர்கள் வர வேண்டும் என்று நாம் விரும்புகிறேன். என் வழியைப் பின்பற்றி பலர் வருவார்கள் என்று நம்புகிறேன் என்றார்.












Click it and Unblock the Notifications