சிங்கப்பூரில் புத்தாண்டு கொண்ட்டாட்டத்தின்போது இந்தியர் கொலை: 4 இந்தியர்கள் கைது

Subscribe to Oneindia Tamil

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் புத்தாண்டில் குடிபோதையில் சக இந்தியரை கொலை செய்த 4 இந்தியர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிங்கப்பூரி்ல் வேலை பார்த்து வந்தவர்கள் இந்தியர்களான ராமசாமி ராபின்ஹுட் (25), போஸ் முருகானந்தம் (32), ராஜா அருள் (22), பழனிச்சாமி விஜயகுமார் (26) மற்றும் பூபாலன் பழனிக்குமார் (24). அவர்கள் அனைவரும் மேலும் சிலருடன் சேர்ந்து பார்க் ஒன்றில் புத்தாண்டை வரவேற்கும் பொருட்டு நள்ளிரவில் மது அருந்தியுள்ளனர்.

குடிபோதையில் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றி ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டுள்ளனர். இது குறித்து கடந்த செவ்வாய்கிழமை அதிகாலை 1 மணிக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதில் பூபாலன் பழனிக்குமார் சிகிச்சை பலனின்றி மறுநாள் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து போலீசார் தகராறில் ஈடுபட்ட ராமசாமி ராபின்ஹுட், போஸ் முருகானந்தம், ராஜா அருள், பழனிச்சாமி விஜயகுமார் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்து அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அதன் பிறகு அவர்களை விசாரணைக்காக போலீஸ் கஸ்டடியில் எடுத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+